Friday 3 August 2012

சோனாலி முகர்ஜி.. வயது 26 .. ஜார்கண்ட் மாநிலம்..

சோனாலி முகர்ஜி.. வயது 26 .. ஜார்கண்ட் மாநிலம்.. 

இவர் சமீபத்தில்,, 

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணா டிரத் அவர்களை சந்தித்து,, 

" எனக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.. அல்லது என்னை கருணை கொலை செய்ய வேண்டும் " என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்..

***
ஏன் ?

கல்லூரி மாணவியான இவர்,,
தேசிய மாணவர் படையிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வந்தவர்..
துணிச்சல் மிக்கவர்.. இவர் தினமும் கல்லூரிக்கு செல்லும்போது,,
மூன்று வாலிபர்கள், தொடர்ந்து பின்தொடர்ந்து,
தொல்லைகள் கொடுத்ததை தாங்கமுடியாமல்,,
இனி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டி வரும் என்று எச்சரித்திருக்கிறார்..

உடனே கோபம் கொண்ட அந்த இளைஞர்கள்,
உன் அழகான முகத்தை சிதைத்தால்தான் சரி படுவாய் என்று கூறி,,
ஒரு இரவில்,, (2006 APRIL 22)
மொட்டை மாடியில் உறங்கி கொண்டிருந்த இவர் மீது அமிலத்தை (அசிட்) ஊற்றி சென்றுவிட்டனர்..

இன்று இவர் முகத்தை பார்ப்பவர்கள் அதிர்ந்து போவார்கள்..

கண் பார்வை பறிபோனது..

ஒரு பக்க காது கேளவில்லை..

இன்னும் வலிகள் அவஸ்தைகளோடு ((ஆறு வருடங்களாக ) வாழ்கிறார்..

**
சமீபத்தில் சென்னை "சங்கர நேந்த்ராலய " கண் மருத்தவமனைக்கு சிகிச்சைக்கு வந்திருக்கிறார் ..

கண்ணின் உட்பகுதியான 'கார்னியாவை ' மாற்ற வேண்டும்,

அதற்க்கு 17 லட்சம் செலவாகும் என்று மருத்தவர்கள் கூறினர்..

அதற்கு வசதி இல்லாததால் திரும்பி சென்று விட்டார்..

**
தற்போது வெளிவந்த ஆனந்த விகடனில் வெளியான கட்டுரை இது..

********************
வசதி உள்ள நண்பர்களே.. இவருக்கு உதவுங்கள்..

விகடன் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு,,

இவரை பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு உதவுங்கள்..

*****
பின் குறிப்பு.::

இவர் மீது ஆசிட் ஊற்றிய மூவரில்,

ஒருவர் இளம் குற்றவாளி என்று சொல்லி விடுதலை செய்து விட்டது,
நீதி மன்றம்..

***
பாதிக்கப்பட்ட இந்த பெண் கூறுகிறார்..

"குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்..

நான் அவர்களின் மிரட்டலுக்கு பயந்து வேறு ஊருக்கு குடி பெயர்ந்தேன் .. "

இந்த தேசத்தின் நீதியின் லட்சணத்தை பார்த்தீர்களா ?

***
இவரின் அன்றைய புகைப்படமும், ஆசிட் வீச்சுக்கு பிந்தைய புகைப்படமும் இணைத்துள்ளேன்.. 

No comments:

Post a Comment